Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்பக்கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு குழந்தை.. மாதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த நீதிமன்றம்..!

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (13:55 IST)
குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அந்த குழந்தை 21 வயது ஆகும் வரை மாதம் பத்தாயிரம் அபராதமாக செலுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த ராக்கு என்பவர் தனது மனைவி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் மீண்டும் அவர் கருத்தரித்துள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 
 
இந்த வழக்கு விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பில் மனுதாரருக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு தேவையான கல்வி மற்றும் அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்ய வேண்டும் என்றும் அந்த குழந்தை 21 வயது நிறைவடையும் வரை ஆண்டுக்கு ரூபாய் 1.20 லட்சம் அதாவது மாதம் 10 ஆயிரம் அரசு வழங்க வேண்டும் என்றும்  நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments