Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பழனியில் 10-ஆம் வகுப்பு படித்துவிட்டு டாக்டரான போலி ஆசாமிகள் கைது

பழனியில் 10-ஆம் வகுப்பு படித்துவிட்டு டாக்டரான போலி ஆசாமிகள் கைது

பழனியில் 10-ஆம் வகுப்பு படித்துவிட்டு டாக்டரான போலி ஆசாமிகள் கைது
, வியாழன், 10 மார்ச் 2016 (14:31 IST)
மக்களை நோய்களில் இருந்து காப்பாற்றும் மருத்துவ துறையில் நுழைந்த இரு போலி மருத்துவர்கள் பழனியில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு டாக்டர் என ஏமாற்றி வந்தவர்கள்.


 
 
பழனி, காவலர்பட்டியில் 10 ஆம் வகுப்பு படித்துவிட்டு, கோவையில் ஒரு தனியார் மெடிக்கல் அசோசியேசனில் டிப்ளமோ மட்டும் முடித்த செந்தில் என்பவர் தான் டாக்டர் என மக்களை ஏமாற்றி வந்துள்ளார்.
 
ஊசி போடுவது, வலி நிவாரண மாத்திரைகள் வழங்குவது மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட மாத்திரைகளையும் பரிந்துரை செய்து வந்துள்ளார்.
 
இதே போல் பழனி, நரிக்கல்பட்டியில் சுருளியாண்டி என்பவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வாளராக பணி புரிந்து வருபவர். ஆனால் இவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.
 
இவர்கள் மீது அதிருப்தியடைந்த பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் ஊரக நலப்பணி துறை நடவடிக்கை எடுத்தது. இதனையடுத்து இவர்கள் மீது விசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் ரவிக்கலாவுக்கு ஊரக நலப்பணிகள் துறை உத்தரவு பிறப்பித்தது.
 
இணை இயக்குனர் ரவிக்கலா நடத்திய அதிரடி சோதனையில் 2 பேரும் போலி டாக்டர்கள் என தெரியவர அவர்கள் கைது செய்யப்பட்ட்டு, அவர்களிடம் இருந்த கல்விச் சான்றுகள், மருந்து மாத்திரைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

Share this Story:

Follow Webdunia tamil