'' 1 டீ வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம்''...டீக்கடைக்கு படையெடுக்கும் மக்கள்

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (19:20 IST)
சென்னை கொளத்தூரில் 1 டீ வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படுகிறது.
 
இந்தியா முழுவதும் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனையானதாக தகவல் வெளியானது.

கடந்த சில நாட்களில் தக்காளி விற்றே லட்சாதிபதி மற்றும் கோடீஸ்வர் ஆன வியாபாரிகள் பற்றிய தகவல்களும் மீடியாக்களில் வெளியானது.

இந்த நிலையில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் 500 ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் தக்காளியின் வரத்து இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகமானதை அடுத்து விலை குறைந்துள்ளதாகவும், நேற்று 170 என விற்பனையான நிலையில் இன்று 160 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், சென்னை கொளத்தூரில் ‘வி சாய்’ என்ற டீ கடை சார்பில் இன்று முதல் 3 நாட்களுக்கு மாலை 4 மணியில் இருந்து 6 மணிவரை முதலில் வரும் 300 பேருக்கு 1 டீ வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் கடையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments