Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.8 லட்சம் பணம் பறிப்பு!

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (19:25 IST)
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகில் உள்ள வீதிவிடங்களன் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது.

இந்த மதுபான கடையில், விளமல் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மகன் தட்சணாமூர்த்தி(53) சூப்பர்வைசராகப் பணியாற்றி வருகிறார்.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை டாஸ்மாக்கில் மதுவிற்பனை செய்த பணத்தை நன்னிலம் வங்கியில் சென்று பணத்தில் போடுவதற்கு அவர் வாகனத்தில் வருவார்..

இந்த நிலையில், இன்று வீதிவிடங்கன் பகுதியில் இருந்து ஸ்ரீவாஞ்சியம் வழியாக நன்னிலம் நோக்கிப் பைக்கில் வந்துகொண்டிருந்தபோது. இரண்டு மர்ம  நபர்கள் முகமூடி அணிந்துகொண்டு வந்து அவரை வழிமறித்து, அரிவாளால் கையை வெட்டி அவரிடமிருந்து ரூ.8லட்சத்து 45 ஆயிரம் பணத்தை பிடுங்கிச் சென்றனர்.

வெட்டுப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்த  தட்சணாமூர்த்தியை  அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments