அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2023 (16:25 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜனவரி 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால்  கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர், உடல்  நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

சமீபத்தில் அவரது காவல் டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின்  நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், ஜனவரி 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று புழல் சிறையில் இருந்து காணொலி கட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிபதி முன்பு செந்தில் பாலாஜி ஆஜரானார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 4 ஆம் தேதி வரை நீட்டித்து  நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 13 வது முறையாக நீட்டித்து    நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments