Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு
, செவ்வாய், 8 டிசம்பர் 2015 (21:24 IST)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் கட்டணத்தை ஜனவரி 31 ஆம் தேதி வரை எவ்வித அபராதமும் இன்றி செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


 


மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் மின் கட்டணத்தை உடனே செலுத்த தேவையில்லை. தற்போது, செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை ஜனவரி 31ஆம் தேதி வரை எவ்வித அபராதமும் இன்றி செலுத்தலாம்.

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் வீடுகளுக்கு தலா அரைகிலோ பிளீச்சிங் பவுடர் மற்றும் தண்ணீரை சுத்தம் செய்வதற்காக 20 குளோரின் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். 

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பண்ணை பசுமை கடைகள் மற்றும் நடமாடும் அங்காடிகள் மூலம் குறைந்த விலையில் காய்கறி விற்பனை தொடரும் என்றும் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் 1,105 மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil