விஜயகாந்தை விசாரிக்க தடை - மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2016 (23:23 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது 5 மாவட்டங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க மாவட்ட நீதிமன்றங்களுக்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக திண்டுக்கல், சிவகங்கை, நாகர்கோவில், தஞ்சாவூர், நெல்லை ஆகிய மாவட்ட நீதிமன்றங்களில் விஜயகாந்த் மீது அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
 
தன் மீது போடப்பட்ட வழக்குள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்டது என்றும், எனவே அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும், இதனால் மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி 5 மாவட்டங்களில் விஜயகாந்த் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க தடை விதித்ததோடு, மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments