Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களின் நிலை என்ன? நீதிமன்றத்தில் அரசு பதில்!

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (07:48 IST)
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்தாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா காரணமாக அறிவிக்கபட்ட லாக்டவுன் காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த முடியாத சூழல் உருவானது. அதனால் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு காலாண்டு மற்றும் அரையாண்டு ஆகிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

அதுபோல தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் பதிலளித்த அரசு வழக்கறிஞர் ‘தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தேர்வு நடக்கவுள்ளது. அதன் பின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் மேல்நிலை மற்றும் பாலிடெக்னிக் வகுப்புகளுக்கான சேர்க்கை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments