Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ மீது சரமாரி செருப்பு வீச்சு

Webdunia
புதன், 20 ஜனவரி 2016 (00:04 IST)
அதிமுக பொதுக் கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ மீது சரமாரியாக செருப்பு வீச்சப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

 
திண்டிவனத்தில், முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆர் 99 ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்  நடைபெற்றது. அப்போது, அதிமுக சிறப்பு பேச்சாளர் முன்னாள் எம்எல்ஏ தீரன் கலந்து கொண்டு பேசினார்.
 
அப்போது கூட்டத்திலிருந்து திடீரென ஒருவர் சரமாரியாக செருப்பை வீசினார். செருப்பு வீசிய நபரை அதிமுகவினர் மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்து, போலீசார் வசம் ஒப்படைத்தனர்.
 
போலீஸ் விசாரணையில், செருப்பு வீசிய நபர் பாமகவைச் சேர்ந்த செல்வம் என தெரிய வந்தது. இதனையடுத்து, வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments