Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளநோட்டுகளை கைமாற்றிய முன்னாள் ராணுவ வீரர் கைது! – சென்னையில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (10:24 IST)
சென்னையில் கள்ள ரூபாய் நோட்டுகளை கைமாற்ற முயன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்தியாவில் கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிதாக வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளையும் கூட கள்ளநோட்டு கும்பல் இம்மி பிசகாமல் அச்சடித்து புழக்கத்தில் விடுவதும், அதுதொடர்பான கைது நடவடிக்கைகளும் அடிக்கடி நடந்து வருகின்றன.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாலையோர கடையொன்றில் சமீபத்தில் ஒருவர் ரூபாய் நோட்டை மாற்ற முயன்றுள்ளார். ஆனால் அது கள்ளநோட்டாக இருந்துள்ளது. இதுதொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அந்த நபரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் கள்ளநோட்டை கைமாற்ற முயன்றவர் முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை என தெரிய வந்துள்ளது. அவருடன் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட வழக்கறிஞர் சுப்பிரமனியன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் இருந்து ரூ.45 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ரூபாய் நோட்டுகளை அச்சடித்து கொடுத்த குமார் என்ற நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments