Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நன்றி தெரிவித்தார் விஜயகாந்த்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நன்றி தெரிவித்தார் விஜயகாந்த்
, திங்கள், 30 நவம்பர் 2015 (10:55 IST)
ஜனநாயக உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– 
 
தேமுதிக சார்பில் மேற்கு சென்னை மாவட்ட கட்சி தொண்டர்கள் பொதுமக்களுக்காக மாநகராட்சி துணை ஆணையரிடம் மனு கொடுக்க சென்றபோது அவர்கள் மீது ஆளும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு ஒன்று தாக்குதல் நடத்தியது.
 
இதையும், பாதிக்கப்பட்ட தேமுதிக தொண்டர்களின் மீதே ஆளும் கட்சியினரால் பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்தும், அந்த வழக்குகளை வாபஸ் பெறக்கோரியும் ஜனநாயக உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil