தேமுதிக, சீமான் கட்சிகளை போட்டியாகவே கருதவில்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன்

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (10:25 IST)
தேமுதிக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சியை ஒரு போட்டியாகவே நான் கருதவில்லை என திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார். 
 
அதிமுக எங்களுக்கு போட்டி இல்லை என்றும் மக்களிடம் இரட்டை இலையின் தாக்கம் இருப்பதாக தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கு வெள்ளோட்டமாக இந்த இடைத்தேர்தல் அமையும் என்றும் தேமுதிக நாம் தமிழர் கட்சியை போட்டியாகவே கருதவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
 சீமான் மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பு இல்லை என்றாலும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அவர் நிலைப்பாட்டை மாற்றுகிறார் என்றும் நிலையற்று பேசுவதால் சீமான் பேச்சை பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார். 
 
மதவாத கட்சியை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்றும் நான் களமிறங்க முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் மேலிடம் விருப்பம் தெரிவித்ததால் மகன் விட்டு சென்ற பணிகளை தொடர களமிறங்கி உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெயலலிதா நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய தவெக கட்சியினர்.. செங்கோட்டையன் வரவால் மாற்றமா?

2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி இன்று உயர்வு!

மூன்று முறை உத்தரவு பிறப்பித்தும் அதனை அரசு ஏன் நிறைவேற்றவில்லை? தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments