Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எமர்ஜன்ஸி காலத்தில் தமிழகத்தில் நல்லதே நடந்தது - ஈ.வி.கே.எஸ்.

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2015 (20:54 IST)
நெருக்கடிநிலை காலத்தில் தமிழ்நாட்டில் நல்லதே நடந்தது என, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
 
மதுரையில் செவ்வாய்க்கிழமை, காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் முகுல் வாஸ்னிக் உடன் இணைந்து இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட 4 பாஜக பெண் பிரமுகர்கள் மீது எழுந்துள்ள புகார்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மெüனம் சாதிப்பது சரியல்ல. புகாருக்கு உள்ளானோரைப் பதவியிலிருந்து விலகச் செய்ய வேண்டும். இல்லையெனில் பிரதமர் பதவி விலக வேண்டும். லலித் மோடியை பிரியங்காவும், அவரது கணவரும் சந்தித்தது திட்டமிட்டதல்ல. ஆகவே அதற்கு உள்நோக்கம் கற்பிப்பது சரியல்ல.
 
நெருக்கடிநிலை குறித்து அத்வானி கூறியது கவனிக்கத்தக்கது. ஆனால், காங்கிரஸால் நெருக்கடி நிலை கொண்டுவரப்பட்டபோது, தமிழகத்தில் மத்திய, மாநில அரசு அலுவலர்கள் சரியான நேரத்துக்குப் பணிக்கு வந்தனர். திமுக போன்ற கட்சிகள் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறினாலும், கடத்தல்காரர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆகவே, நெருக்கடிநிலை காலத்தில் தமிழகத்தில் நல்லதே நடந்தது என்றார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments