Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி

Webdunia
வியாழன், 21 ஆகஸ்ட் 2014 (14:31 IST)
ஈரோடு அருகே பள்ளி மாணவர்கள் மூன்று பேர் குட்டையில் மூழ்கி இறந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ளது கஸ்தூரி நகர். இங்கு வசிப்பவர்கள் பண்ணாரி மகன் ஸ்ரீகுமார், ராஜன் மகன் தினேஷ், விஜயன் மகன் லோகநாதன் ஆகிய 14 வயதுடைய இவர்கள் மூவரும் தன் ராஜன்நகர் கஸ்தூரிபாய் நிகேதன் அரசு உதவி பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளி விட்டு வீட்டிற்கு வந்த மூவரும் தன் நண்பர்கள் நால்வருடன் மொத்தம் ஏழு பேர் வீட்டின் அருகில் உள்ள திருப்பூர்காரர் தோட்டத்தில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்றனர்.

அப்போது ஸ்ரீகுமார், தினேஷ், லோகநாதன் ஆகிய மூவரும் ஆழப்பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கினர். உடனே மற்ற நால்வரும் கிராம மக்களிடம் சென்று இது குறித்து கூறினர்.

கிராம மக்கள் ஓடிவந்து குட்டையில் மூழ்கிய மூவரையும் மீட்டபோது அவர்கள் மூச்சுத் திணறி இறந்தது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் கஸ்தூரி நகர் கிராமத்தைச் சோகத்தில் மூழ்கடித்தது. தகவல் தெரிந்ததும் சத்தியமங்கலம் காவல்துறை ஆய்வாளர் முத்துசாமி, தாசில்தார் சேதுராஜ், ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ., பி.எல்.சுந்தரம் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

Show comments