Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி

குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி
, வியாழன், 21 ஆகஸ்ட் 2014 (14:31 IST)
ஈரோடு அருகே பள்ளி மாணவர்கள் மூன்று பேர் குட்டையில் மூழ்கி இறந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ளது கஸ்தூரி நகர். இங்கு வசிப்பவர்கள் பண்ணாரி மகன் ஸ்ரீகுமார், ராஜன் மகன் தினேஷ், விஜயன் மகன் லோகநாதன் ஆகிய 14 வயதுடைய இவர்கள் மூவரும் தன் ராஜன்நகர் கஸ்தூரிபாய் நிகேதன் அரசு உதவி பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளி விட்டு வீட்டிற்கு வந்த மூவரும் தன் நண்பர்கள் நால்வருடன் மொத்தம் ஏழு பேர் வீட்டின் அருகில் உள்ள திருப்பூர்காரர் தோட்டத்தில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்றனர்.

அப்போது ஸ்ரீகுமார், தினேஷ், லோகநாதன் ஆகிய மூவரும் ஆழப்பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கினர். உடனே மற்ற நால்வரும் கிராம மக்களிடம் சென்று இது குறித்து கூறினர்.

கிராம மக்கள் ஓடிவந்து குட்டையில் மூழ்கிய மூவரையும் மீட்டபோது அவர்கள் மூச்சுத் திணறி இறந்தது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் கஸ்தூரி நகர் கிராமத்தைச் சோகத்தில் மூழ்கடித்தது. தகவல் தெரிந்ததும் சத்தியமங்கலம் காவல்துறை ஆய்வாளர் முத்துசாமி, தாசில்தார் சேதுராஜ், ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ., பி.எல்.சுந்தரம் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil