Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் பெயிண்ட் அடிக்க கட்டாயப்படுத்தப்பட்டார்களா? – பள்ளி நிர்வாகம் விளக்கம்!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (08:42 IST)
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் தரையில் பெயிண்ட் அடிக்கும் வீடியோ சர்ச்சையான நிலையில் அதுகுறித்து பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்து உள்ள பெரியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகள் பலர் படித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த பள்ளி வளாகத்தில் மாணவர்கள் சிலர் தரைக்கு வெள்ளை பெயிண்ட் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அப்பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி, மாணவ, மாணவிகள் தாங்களாகவே ஆர்வத்துடன் பள்ளி சுவர்களில் ஓவியம் தீட்டுவது, வண்ணம் பூசுவது வழக்கமான ஒன்று என்றும், கோலம் போடுவதற்காக மாணவர்கள் பெயிண்ட் அடித்தபோது யாரோ வீடியோ எடுத்து அதை தவறாக பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

படி படி என்று சொன்னதால் தந்தை தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments