ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு! ஒரே ஆட்சியில் மூன்றாவது தேர்தலை சந்திக்கும் தொகுதி!

Prasanth Karthick
செவ்வாய், 17 டிசம்பர் 2024 (14:14 IST)

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவான ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைந்ததையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

வரும் 2025ம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவால் காலியாகி உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும், டெல்லி தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது.

 

இதனால் ஒரு ஆட்சிக் காலத்திற்குள் மூன்று முறை தேர்தல் நடத்தப்பட்ட தொகுதியாக மாற உள்ளது ஈரோடு கிழக்கு தொகுதி. கடந்த 2021ம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவேரா திருமகன போட்டியிட்டு வெற்றி பெற்றார். இருந்தபோதிலும் 2022ம் ஆண்டு ஜனவரியில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 

 

அதை தொடர்ந்து காலியான ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 14ம் தேதி காலமானார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments