Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் மனுவுக்கு எதிர்மனு அளிக்க திட்டம்! – எடப்பாடியார் பேச்சுவார்த்தை!

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (11:47 IST)
அதிமுக தலைமை தொடர்பான விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள மனுவுக்கு பதில் மனு அளிக்க எடப்பாடி பழனிசாமி அணி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. சில நாட்கள் முன்னதாக நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்த பேச்சால் பரபரப்பு எழுந்த நிலையில் எந்த வித தீர்மானமும் நிறைவேறாமல் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது.

இதனால் டெல்லி புறப்பட்டு சென்ற ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் இதுகுறித்த புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். தற்போது அதற்கு எதிராக பதில்மனு அளிப்பது தொடர்பாக சி.வி.சண்முகம் மற்றும் எடப்பாடி பழனிசாமி விவாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்துடன் தேர்தல் ஆணையத்திடம் பதில் மனு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments