பொங்கல் தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (13:20 IST)
பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டதில் 500 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
பொங்கல் பண்டிகைக்காக ஆயிரத்து 127 கோடி ரூபாய் மதிப்பில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த பொறுப்புகள் தரமானவையாக இல்லை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து குற்றச்சாட்டு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் வகையில் 500 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார் 
 
தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதால் மக்கள் சிறப்பான பொங்கலை கொண்டாட முடியவில்லை என்றும் அவர் கூறினார் 
 
மேலும் பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள ஊழலை மறைக்கவே ரெய்டு நடத்தப்படுகிறது என்றும் நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments