Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈபிஎஸ் ஃபார் பெட்டர்.. ஓபிஎஸ் வெரி வொர்ஸ்ட்? கட்சிக்குள் பிரளயம்!

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (12:12 IST)
ஆதரவாளர்களுக்கு நன்மை செய்வதில் ஓ.பன்னீர் செல்வத்தை விட எடப்பாடி பழனிச்சாமி எவ்வளவோ பெட்டர் என கட்சிக்குள் ஒரு டாக் எழுந்துள்ளதாம். 
 
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், சசிகலா தமைமை பொறுப்பை ஏற்ற பின்னர் ஓபிஎஸ் முதல்வர பதவியை ராஜினாமா செய்துவிட்டு தர்ம யுத்தம் நடத்தினார். இதன் பின்னர் சசிகலா சிறைக்கு சென்றதும், தினகரனை ஓரம் கட்டிவிட்டு ஈபிஎஸ் - ஓபிஎஸ் கூட்டு சேர்ந்தனர். 
 
இந்நிலையில் இப்போது வரை கட்சிக்குள் ஈபிஎஸ் அணி ஓபிஎஸ் அணி என இரு பிரிவுகள் இருந்து வருகிறது. ஆனால், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் தற்போது ஈபிஎஸ் பக்கம் சாய்வதாக தெரிகிறது. ஆம், ஈபிஎஸ் தனது ஆதரவாளர்களுக்கு முடிந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து நடத்துகிறாராம். 
உதாரணமாக ஈபிஎஸ் தனது ஆதரவாளருக்கு ராஜ்ய சபா சீட் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால், ஓபிஎஸ் மூத்தவர்களை விட்டுவிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே காரணத்திற்காக தனது மகனுக்கு சீட் வாங்கி கொடுத்துவிட்டார். 
 
எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களை கைவிடாமல், அவர்களுக்கு உரிய சலுகைகளை அளித்து வருகிறாராம். ஆனால், இந்த விஷயத்தில் ஓபிஎஸ் பயங்கரமாக கோட்டைவிடுவதால் கட்சிக்குள் இருக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்கல் ஈபிஎஸ் பக்கம் மாறத்துவங்கியுள்ளனராம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ச்சி என்ற பெயரில் மக்களை அழிக்காதீங்க.. உங்க நாடகம் அம்பலம் ஆயிட்டு! - விஜய் ஆவேசம்!

குப்பைக்கூளமான மெரினா.. காணும் பொங்கல் விடுமுறை இனி ரத்து? - பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை!

காப்பி பேஸ்ட் .. சொந்தமாக ஒரு அறிக்கை கூட வெளியிட முடியவில்லையா? ஈபிஎஸ்-க்கு கண்டனம்..!

விஷம் கொடுத்து காதலனை கொலை செய்த வழக்கு: காதலிக்கு தூக்கு தண்டனை.. அதிரடி தீர்ப்பு..!

துணை முதல்வர் பதவி பவன் கல்யாணுக்கு பறிபோகிறதா? ஆந்திர அரசியலில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments