Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரவுடிகள் அட்டகாசம்.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

Siva
திங்கள், 10 ஜூன் 2024 (15:17 IST)
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரவுடிகள் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கண்ணாடிகளை சேதப்படுத்தியதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கஞ்சா மற்றும் கொலை வழக்கில் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரௌடி கும்பல் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கண்ணாடிகளை சேதப்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது.
 
போதை பொருள் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு அடையாள அட்டையாக திகழும் இந்த விடியா திமுக ஆட்சியில் பொதுமக்கள் மருத்துவ உதவி பெற வரும் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு இல்லாத சூழல் தான் உள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் ரவுடி கும்பல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியது என்பதும் இதில் மருத்துவமனையில் உள்ள பல உபகரணங்கள் சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments