கீழடி அருங்காட்சியகத்தை காண வரும் பார்வையாளர்களுக்கு கட்டணம்.. அதிரடி அறிவிப்பு..!

Webdunia
ஞாயிறு, 26 மார்ச் 2023 (20:49 IST)
கீழடி அருங்காட்சியகத்தை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி அருங்காட்சியகத்தை காண வரும் பார்வையாளர்களுக்கு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பெரியவர்களுக்கு பதினைந்து ரூபாய் ,சிறியவர்களுக்கு பத்து ரூபாய் மற்றும் மாணவர்களுக்கு ஐந்து ரூபாய் என்றும் வெளிநாட்டவர்களுக்கு பெரியவர்களுக்கு ஐம்பது ரூபாய் சிறியவர்களுக்கு 25 என்றும் கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் கீழடி அருங்காட்சியகத்தில் புகைப்படம் எடுக்க முப்பது ரூபாய், வீடியோ எடுக்க 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கீழடி அருங்காட்சியகத்தை இதுவரை இலவசமாக பார்த்து வந்த பொதுமக்கள் தற்போது கட்டணம் வசூல் என்ற தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து அதிருப்தி அடைந்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹமாஸ் பாணியில் ட்ரோன்கள் மூலம் டெல்லியை தாக்க திட்டமா? NIA விசாரணையில் அதிர்ச்சி..!

ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்பு.. கலவரத்தில் 2 பேர் பலி..!

போதைபொருட்களுடன் வந்த பாகிஸ்தான் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: BSF தகவல்..!

கனமழை எச்சரிக்கை எதிரொலி: ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் குறித்த தகவல்..!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி.. சென்னையில் ஒரு வாரம் சிறப்பு முகாம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments