Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை நடக்க இருந்த பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு! – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (12:05 IST)
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு நாளை நடைபெற இருந்த நிலையில் தற்போது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் படிக்க விண்ணப்பித்தோர் கலந்தாய்வு முறையில் விருப்பமான கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர சுமார் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஆகஸ்டு 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 25ம் தேதி முதல் தொடங்கும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளை நடைபெற இருந்த பொறியியல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். நீட் தேர்வு முடிவுகள் இன்னமும் வெளியாகாத நிலை உள்ளதால் நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின் கலந்தாய்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள பலர் நீட் தேர்வும் எழுதியுள்ளதால், நீட் தேர்வில் செலக்ட் ஆகும் மாணவர்கள் பொறியியல் படிப்பை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments