Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு: மாணவர்களிடையே பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (17:06 IST)
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் முடிவுகள் வெளியானதை அடுத்து மாணவ மாணவிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடக்க வேண்டிய பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இருப்பினும் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் மட்டும் ரத்து செய்யப்படவில்லை
 
இந்த நிலையில் இந்த செமஸ்டர் தேர்வு முடிவுகளுக்கான நெறிமுறைகளின்படி செமஸ்டர் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. முந்தைய செமஸ்டர் தேர்வு மற்றும் உள் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்களுக்கு அடுத்த செமஸ்டர் உடன் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் மாணவர்கள் இந்த செமஸ்டர் தேர்வு முடிவுகளை அறிய www.annauniv.edu, மற்றும் www.aucoe.annauniv.edu ஆகிய இணைய தளங்களில் சென்று பார்க்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments