Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

Webdunia
திங்கள், 23 ஜூன் 2014 (11:00 IST)
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
 
தமிழ்நாட்டில் உள்ள 600 பொறியியல் கல்லூரிகளில் பி.இ. சேர்வதற்கு 2 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. அந்த இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
 
அதன்படி இந்த ஆண்டு கலந்தாய்வை நடத்துவதற்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று அந்த மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தயாரித்த தகுதிப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 16 ஆம் தேதி வெளியிட்டது.
 
இன்று விளையாட்டில் சிறந்த விளங்கும் மாணவ-மாணவிகளுக்கு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு நாளை முடிவடைகிறது. 25 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்காக கலந்தாய்வு நடக்கிறது.
 
இதைத் தொடர்ந்து ஜூலை 9 ஆம் தேதி முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை பிளஸ்-2 தொழில்கல்வி படித்த மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து 1 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளும் பொது கலந்தாய்வு வருகிற ஜூலை 27 ஆம் தேதி தொடங்குகிறது.
 
கலந்தாய்வுக்கு வருபவர்கள் கொண்டுவரவேண்டிய சான்றிதழ்கள் பற்றிய விவரம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments