Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

Webdunia
திங்கள், 23 ஜூன் 2014 (11:00 IST)
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
 
தமிழ்நாட்டில் உள்ள 600 பொறியியல் கல்லூரிகளில் பி.இ. சேர்வதற்கு 2 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. அந்த இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
 
அதன்படி இந்த ஆண்டு கலந்தாய்வை நடத்துவதற்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று அந்த மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தயாரித்த தகுதிப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 16 ஆம் தேதி வெளியிட்டது.
 
இன்று விளையாட்டில் சிறந்த விளங்கும் மாணவ-மாணவிகளுக்கு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு நாளை முடிவடைகிறது. 25 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்காக கலந்தாய்வு நடக்கிறது.
 
இதைத் தொடர்ந்து ஜூலை 9 ஆம் தேதி முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை பிளஸ்-2 தொழில்கல்வி படித்த மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து 1 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளும் பொது கலந்தாய்வு வருகிற ஜூலை 27 ஆம் தேதி தொடங்குகிறது.
 
கலந்தாய்வுக்கு வருபவர்கள் கொண்டுவரவேண்டிய சான்றிதழ்கள் பற்றிய விவரம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

Show comments