Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இறுதி சடங்கிற்கான பணம் பீரோவில் உள்ளது’ - மாணவி, தாத்தா தற்கொலை

Webdunia
புதன், 7 அக்டோபர் 2015 (21:05 IST)
இறுதி சடங்கிற்கான பணம் பீரோவில் உள்ளது என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி ஒருவர் தனது தாத்தாவுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 
புதுவையை அடுத்த வம்பாகீரப் பாளையத்தை சேர்ந்த 90 வயது முதியவர் ராமசந்திரன். மகனும், மருமகளும் இறந்து விட்டதால் தனது பேத்தி கலைசெல்வியுடன் (21) வசித்து வந்தார். கலைசெல்வி தணியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பி.டெக் படித்து வந்தார்.
 
இந்நிலையில் தாத்தாவும், பேத்தியும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஒதியஞ்சாலை போலீசார் வீட்டில் நடத்திய சோதனையில் ஒரு கடிதம் சிக்கியது.
 
அதில் தங்கள் சாவுக்கு யாரும் காரணமல்ல என்றும் வாழபிடிக்காமலேயே தற்கொலை செய்வதாக எழுதியுள்ளனர்.
 
அதோடு தங்களின் இறுதி சடங்கை எளிமையாக நடத்த போதுமான தொகை பீரோவில் இருப்பதாகவும் அதனை பயன்படுத்தி கொள்ளுமாறும உருக்கமுடன் கேட்டுக் கொண்டுள்ளனர்.
 
ஒரே நேரத்தில் தாத்தாவும், பேத்தியும் தற்கொலை செய்துள்ளது அந்த பகுதியில் சோகத்தை உருவாக்கியுள்ளது.

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

Show comments