பொறியியல் கல்லூரிகளில் நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து.. புதிய தேதிகள் என்ன?

Siva
வெள்ளி, 10 மே 2024 (08:01 IST)
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மே 15ஆம் தேதி தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பொறியியல் தேர்வுகள் ஜூன் 6-ஆம் தேதியில் இருந்து நடத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் மே 15 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தேர்வுகள் ஜூன் 6 ஆம் தேதி முதல் நடத்தப்படும் எனவும், நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் வாக்குகள் வரும் ஜூன் 4 ஆம் தேதி அன்று எண்ணப்பட உள்ளதால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொறியியல் கல்லூரிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதால் இந்த தேதி மாற்றம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக சென்னையில் உள்ள 3 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொறியியல் கல்லூரில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்ல மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதால் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பில் உள்ளதாகவும், ஆதலால் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஜூன் 6 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments