Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ஜினீயரிங் விண்ணப்பம் விற்பனை ஒரு லட்சத்து 68 ஆயிரத்தை தாண்டியது

Webdunia
திங்கள், 12 மே 2014 (10:18 IST)
என்ஜினீயரிங் சேர்வதற்கான விண்ணப்பம் விற்பனை ஒரு லட்சத்து 68 ஆயிரத்தை தாண்டியது.
தமிழ்நாட்டில் 600-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்தும் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவ-மாணவிகளை பி.இ. படிப்பில் சேர்ப்பதற்காக கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது.
 
அது தொடர்பாக மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பம் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 60 இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.
 
கடந்த 7 வேலை நாட்களில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 780 விண்ணப்ப படிவங்கள் விற்கப்பட்டுள்ளன.
 
விண்ணப்பம் விற்கப்பட்ட விவரம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆம் தேதி 69 ஆயிரத்து 943 படிவங்களும், 5 ஆம் தேதி 48 ஆயிரத்து 593 படிவங்களும், 6 ஆம் தேதி 14 ஆயிரத்து 985 படிவங்களும், 7 ஆம் தேதி 9 ஆயிரத்து 884 படிவங்களும், 8 ஆம் தேதி 7242 படிவங்களும், 9 ஆம் தேதி 8497 படிவங்களும், 10 ஆம் தேதி 9 ஆயிரத்து 636 படிவங்களும் விற்கப்பட்டுள்ளன.
 
கடந்த ஆண்டு ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்கள் சேர்ந்த கட்ஆப் மதிப்பெண் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments