Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக, பாஜக பிரமுகர்கள் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை.. புதுக்கோட்டையில் பரபரப்பு..!

Mahendran
வெள்ளி, 29 நவம்பர் 2024 (11:17 IST)
புதுக்கோட்டையில் அதிமுக மற்றும் பாஜக பிரமுகர்களின் மூன்று வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சார்லஸ் நகர் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், கரம்பக்குடி தாலுகா கடுக்காய்காடு கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் சகோதரர்கள் அதிமுகவில் நிர்வாகிகளாக இருந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகானந்தம் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தற்போது அவர் பாஜக மாவட்ட பொருளாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் ஒப்பந்ததாரர்களாக உள்ள நிலையில், அவர்களது வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், ஆலங்குடியைச் பழனிவேல் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த மூன்று வீடுகளின் பாதுகாப்பிற்காக துப்பாக்கியுடன் ஆயுதப் படையினர் உள்ளனர். இன்று காலை முதல் நடந்து வரும் இந்த சோதனையால் புதுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments