காவலர் கொலை வழக்கு.. கொலையாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்..!

Siva
திங்கள், 24 மார்ச் 2025 (09:32 IST)
மதுரை அருகே தனிப்படை காவலர் மலையரசன் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு  கைது செய்துள்ளனர்.
 
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள முக்குளம் அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த மலையரசன்  சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தனிப்படை காவலராக பணியாற்றி வந்தார். சில தினங்களுக்கு முன், அவரது மனைவி பாண்டிச்செல்வி ஒரு கார் விபத்தில் காயமடைந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
 
மனைவியின் மருத்துவ ஆவணங்களை பெறுவதற்காக திங்கள்கிழமை மதுரைக்கு சென்ற மலையரசன், பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, செவ்வாய்கிழமை இரவு மதுரை சுற்றுச் சாலையில் ஈச்சனேரி கண்மாய் அருகே எரிந்து கிடந்த அவரது உடல் மீட்கப்பட்டது.
 
இந்த கொலை தொடர்பாக, மூவேந்திரன் என்பவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், மதுரை அருகே இன்று காலை அவரை சுட்டு கைது செய்துள்ளனர். காயமடைந்த மூவேந்திரனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் டிஸ்சார்ஜ் ஆனவுடன் அவரிடம் விசாரணை செய்யப்படும் என தெரிகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments