Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சவக்கிடங்கில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி பாலாஜி உடல்.. போலீஸ் பாதுகாப்பு..!

Siva
புதன், 18 செப்டம்பர் 2024 (08:32 IST)
சென்னையில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் உடல் ராயப்பேட்டை சவக்கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டதாக தகவல்வெளியாகியுள்ளது. இதனையடுத்து அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சென்னை ராயப்பேட்டை துணை ஆணையர் இளங்கோவன் தலைமையில், 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
இன்று அதிகாலை, சென்னை வியாசர்பாடி பகுதியில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி, போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். வழக்கு ஒன்றிற்காக போலீசார் கைது செய்ய முயன்றபோது, ரவுடி கள்ளத்துப்பாக்கியால் தாக்க முயன்றதால், என்கவுன்ட்டர் சம்பவம் நடந்தது என்று கூறப்படுகிறது.
 
சென்னயின் பிரபல தாதா  காக்கா தோப்பு பாலாஜி, பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். இவர்மீது குண்டர் சட்டம் பாய்ந்திருந்ததுடன், பெட்ரோல் குண்டு வீசியது உள்ளிட்ட பல வழக்குகளிலும் போலீசாரால் தொடர்ந்து தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரனை கைது செய்த ED அதிகாரி விருப்ப ஓய்வு.. ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணி..!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

51 அரசு மருத்துவர்கள் டிஸ்மிஸ்.. சுகாதாரத்துறை அமைச்சரின் அதிரடி நடவடிக்கை..!

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments