Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இமானுவேல் சேகரின் 61வது நினைவு தினம்

Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (12:54 IST)
இமானுவேல் சேகரின் 61வது நினைவுதினம் ராமனாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள சந்தைப் பேட்டை பகுதியில் இன்று  நடக்கவுள்ளது.

இமானுவேல் சேகரின் நினைவுதினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள், அமைப்பாளர்கள் போன்றோர் கலந்து கொள்ள உள்ளனர். அதன் பொருட்டு அங்கு பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டு சுமார் 5000 ம் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இருக்க மோப்ப நாய்களும், வெடிகுண்டு நிபுணத்துவமுள்ள போலீசாரும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் பரமக்குடி பகுதியைச் சுற்றிலும் 75 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு நேற்றைய ஒத்திகையின் போது ட்ரோன் வகை கண்காணிப்பு கேமராக்களும் பறக்கவிடப்பட்டன.அப்போது தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். ஆங்காங்கே பல பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பும்பலப்படுத்தப்பட்டுள்ளது .

இந்த அஞ்சலி நிகழ்ச்சி தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments