Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பசியால் கோபம்: பாகனை மிதித்து கொன்ற கோவில் யானை! பெரும் பரபரப்பு

பசியால் கோபம்: பாகனை மிதித்து கொன்ற கோவில் யானை! பெரும் பரபரப்பு
, புதன், 12 ஏப்ரல் 2017 (04:36 IST)
கடும் பசி, ஓயாத உழைப்பு காரணமாக ஆத்திரம் அடைந்த கோவில் யானை ஒன்று பாகனை மிதித்து கொன்ற சம்பவம் கன்னியாகுமரி அருகே நடந்துள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 


உண்ணாமலைக்கடை என்ற பகுதியில் ஜான் என்பவர் பெண் யானை ஒன்றை வளர்த்து கோவில் திருவிழாவுக்கு அனுப்பி சம்பாதித்து வந்தார். இந்த யானையை  ராஜ்குமார் மற்றும் பிரசாந்த் ஆகிய இரண்டு பாகன்கள் பார்த்துக் கொண்டனர்

இந்த நிலையில் சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த நட்டாலம் பகுதியில் நடைபெற்ற திருவிழாவிற்கு அழைத்து சென்ற பாகன்கள் திருவிழா முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென யானைக்கு மதம் பிடித்து பாகன் பிரசாந்தை தூக்கி போட்டு மிதித்து கொன்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த இன்னொரு பாகன் ராஜ்குமார் யானையை சமாதானப்படுத்தி அருகே இருந்த தென்னை மரத்தில் கட்டிப்போட்டார்.

ஓயாத உழைப்பு, ஓய்வின்மை, கடுமையான பசி ஆகியவையே யானைக்கு மதம் பிடிக்க காரணம் என்று தெரிய வந்ததால் யானையின் உரிமையாளர் மற்றும் பாகனிடம் விசாரணை நடந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் நினைச்சா ஆட்சியை கலைச்சிடுவேன்: மிரட்டும் அதிமுக அம்மா எம்.எல்.ஏ