Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ்மாக் கடைகளில் மின்னணு விற்பனை எந்திரம் – ஐசிஐசிஐ வங்கி ஒப்பந்தம்!

டாஸ்மாக் கடைகளில் மின்னணு விற்பனை எந்திரம் – ஐசிஐசிஐ வங்கி ஒப்பந்தம்!
, புதன், 12 ஆகஸ்ட் 2020 (09:31 IST)
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மின்னணு விற்பனை இயந்திரங்கள் வைக்க ஐசிஐசிஐ வங்கி ஒப்பந்தம் செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா லாக் டவுனிலும் டாஸ்மாக் செம்மையாக வசூல் செய்து வருகின்றன. ஆனால் அதிக பட்ச விலையை விட அதிகமாக விற்கப்படுவதாகவும் வாடிக்கையாளர்களுக்கு முறையாக ரசீது கொடுப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தமிழகம் எங்கும் உள்ள 5700 டாஸ்மாக் கடைகளில் மின்னணு விற்பனை எந்திரங்கள் வைத்து விற்பனை நடத்த ஐசிஐசிஐ வங்கி ஒப்பந்தம் செய்துள்ளது. அதனால் இனிமேல் டாஸ்மாக் கடைகளில் நியாயமான விலையில் சரக்கு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த அறிவிப்பு வரும்வரை ரயில்கள் இயங்காது! – ரயில்வே அதிரடி அறிவிப்பு!