Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தில் உரசிய மின்கம்பி! பயணிகளை காப்பாற்றி உயிரை விட்ட ஓட்டுநர்! - நீலகிரியில் சோகம்!

Prasanth Karthick
சனி, 17 ஆகஸ்ட் 2024 (09:31 IST)

நீலகிரியில் அரசு பேருந்தின் மீது மின்கம்பி உரசியதில் பேருந்து ஓட்டுநர் பரிதாப பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மலைப்பாதையில் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் 43 வயதான பிரதாப். வழக்கம்போல பிரதாப் பேருந்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றபோது கோத்தகிரி அருகே தாழ்வாக மின்கம்பி ஒன்று தொங்கிக் கொண்டிருந்துள்ளது. 

 

அப்போது அந்த வழியாக சென்ற அரசு பேருந்தில் மின்கம்பி உரசி தீப்பொறிகள் எழுந்துள்ளது. உடனடியாக பிரதாப் பயணிகளை இறங்கி போகுமாறு எச்சரித்துள்ளார். பயணிகளை பத்திரமாக வெளியேற்றிவிட்டு பிரதாப் வெளியேற முயன்றபோது மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

பிரதாப்பின் மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.3 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர் ப்ரதாப்பின் மறைவு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments