Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து! – மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் இயக்கம் அதிகரிப்பு!

Prasanth Karthick
ஞாயிறு, 17 மார்ச் 2024 (09:16 IST)
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின்சார ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதால் மெட்ரோ ரயில் சேவை, பேருந்து சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.



சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் காரணமாக இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மின்சார ரயில்கள் ரத்து காரணமாக பொது போக்குவரத்தில் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்க இன்று மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி காலை 10மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து மெட்ரோ ரயில்களும் 7 நிமிட இடைவெளியில் செயல்படும். இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் சிரமங்களை குறைப்பதற்காக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் கூடுதலாக நகர பேருந்துகளை இயக்குவதாகவும் அறிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments