Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சார இணைப்பு துண்டிப்பு: நிரந்தரமாக மூடப்படுகிறதா?

Webdunia
ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (08:40 IST)
ஸ்டெர்லைட் ஆலைக்கு நேற்று முதல் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா வைரஸ் முதல் மற்றும் இரண்டாவது அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்தபோது சுப்ரீம் கோர்ட்டு அனுமதி காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கப்பட்டது. ஆனால் மூன்று மாதங்களுக்கு மட்டுமே அனுமதி என்று கூறப்பட்டு வந்த நிலையில் ஜூலை 31ஆம் தேதியுடன் அந்த அனுமதி முடிவடைந்தது
 
இதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் கோரிக்கை விடுத்த நிலையில் தமிழக அரசு அதிரடியாக ஸ்டெர்லைட் ஆலையை இயங்க அனுமதிக்க முடியாது என்று கூறியது
 
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் சப்ளையை நிறுத்தி நிலையில் தற்போது மின்சார சப்ளையையும் தமிழக அரசு நிறுத்தியுள்ளது. இதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை மேலும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டெர்லைட் ஆலையை இயங்க விடமாட்டோம் என ஏற்கனவே தமிழக முதல்வர் உறுதியாக கூறியுள்ளார் என்பது தெரிந்ததே
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகள் செயல்பட்ட வந்த குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்: வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி..!

திரைக்கு வர இருந்த கவுண்டம்பாளையம் படம் திரையிடபடாது ஒத்திவைப்பதாகவும் இது தொடர்பாக முதல்வரையும், செய்திதுறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பேன்- இயக்குனரும் நடிகருமான ரஞ்சித்!

கள்ள உறவை கைவிட மறுத்த மனைவி! ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற கணவன்!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை.. பரபரப்பு தகவல்..!

தொடர் ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தையில் திடீர் வீழ்ச்சி.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments