Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சார இணைப்பு துண்டிப்பு: நிரந்தரமாக மூடப்படுகிறதா?

Webdunia
ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (08:40 IST)
ஸ்டெர்லைட் ஆலைக்கு நேற்று முதல் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா வைரஸ் முதல் மற்றும் இரண்டாவது அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்தபோது சுப்ரீம் கோர்ட்டு அனுமதி காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கப்பட்டது. ஆனால் மூன்று மாதங்களுக்கு மட்டுமே அனுமதி என்று கூறப்பட்டு வந்த நிலையில் ஜூலை 31ஆம் தேதியுடன் அந்த அனுமதி முடிவடைந்தது
 
இதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் கோரிக்கை விடுத்த நிலையில் தமிழக அரசு அதிரடியாக ஸ்டெர்லைட் ஆலையை இயங்க அனுமதிக்க முடியாது என்று கூறியது
 
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் சப்ளையை நிறுத்தி நிலையில் தற்போது மின்சார சப்ளையையும் தமிழக அரசு நிறுத்தியுள்ளது. இதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை மேலும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டெர்லைட் ஆலையை இயங்க விடமாட்டோம் என ஏற்கனவே தமிழக முதல்வர் உறுதியாக கூறியுள்ளார் என்பது தெரிந்ததே
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments