சென்னையில் மின்சார பஸ்: ஒருமுறை சார்ஜ் செய்தால் 240 கிமீ பயணம்

Webdunia
சனி, 25 ஆகஸ்ட் 2018 (10:00 IST)
சென்னையின் போக்குவரத்தை மின்சார ரயில்கள் ஓரளவு சமாளித்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் மின்சார பஸ்களும் இயங்கவிருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து தான் வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும், விரைவில் மின்சார பஸ்கள் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்
 
மின்சார பஸ்களின் விலை மிக சற்றும் அதிகம் என்றாலும் அந்த பஸ்களை இயக்க ஆகும் செலவு மிகவும் குறைவு. நாளுக்கு நாள் விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலையுயர்வினை கணக்கில் கொண்டு மின்சார பஸ்களை அதிகம் இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
 
மின்சார பஸ்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 240 கிலோமீட்டர் தூரத்தை 54 பயணிகளோடு பயணிக்கலாம். மேலும், பஸ்களை சார்ஜ் செய்யும் நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை செய்ய  வேண்டியது அவசியம்.  சென்னையில் இந்த பஸ்களை எந்தெந்த வழித்தடங்களில் இயக்குவது அதற்காக எந்தெந்த இடங்களில் டிரான்ஸ்பார்மர் அமைப்பது என்பது குறித்து வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் ஆய்வு நடத்தி வருவதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று சரிந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தந்தைக்காக பழிவாங்க திட்டமிட்ட கல்லூரி மாணவி.. ஆசிட் வீசியதாக பொய் புகார்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி..!

அசாமில் மட்டும் 'SIR' நடவடிக்கை இல்லாதது ஏன்? ஜோதிமணி எம்பி கேள்வி..!

மெலிஸா புயலால் ஜமைக்காவில் கடும் சேதம்.. கியூபாவை நோக்கி நகர்வதால் மக்கள் அச்சம்..!

இன்று வேகமாக உயர்ந்த தங்கம்.. மீண்டும் உச்சம் தொடுமா? - இன்றைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments