Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடுவோம்: சரத்குமார்

தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடுவோம்: சரத்குமார்

தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடுவோம்: சரத்குமார்
, வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (23:38 IST)
தமிழக சட்ட மன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல்  அறிக்கை விரைவில் வெளியிடுவோம் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
 

 
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மாற்றத்தை நோக்கி மக்கள் சந்திப்பு என்ற தலைப்பில்  கொங்கு மண்டலத்தில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.
 
இதற்காக, சென்னயில் இருந்து கோவை வந்து, பின்பு அங்கு இருந்து அவினாசிக்கு காரில் சென்றார். அவினாசியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து கொள்ளவே உங்களை எல்லாம் நேரில் சந்திக்க வந்து உள்ளேன். நமது நாட்டில் உள்ள இளைஞர்கள் நன்கு படித்து கல்வி, வேலை வாய்ப்பில் உயர்வு பெற்று நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.
 
தமிழகத்தில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் வருகிறது. இந்த சட்ட மன்றத் தேர்லில் சமத்துவ மக்கள் கட்சி முக்கியபங்கு வகிக்கும். நாங்கள் இன்றுவரை அதிமுக கூட்டணியில் தான் நீக்கிகின்றோம். ஆனாலும், தேர்தலில் போட்டியிடும் தொகுதி பின்பு அறிவிக்கப்படும். ஆனால், விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றார். 

Share this Story:

Follow Webdunia tamil