Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”தேர்தல் நேர்மையாக நடந்து முடிந்தது”.. மாநில தேர்தல் ஆணையர்

Arun Prasath
சனி, 4 ஜனவரி 2020 (16:50 IST)
உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும் அமைதியான முறையிலும் நடத்தி முடிக்கப்பட்டது என மாநில் தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இரண்டு நாட்களாக நடைபெற்ற நிலையில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றது.

இதனிடையே உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடத்தப்படவில்லை என எதிர்கட்சிகள் புகார் அளித்தனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, “உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதிகளுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “மாநகராட்சி, நகராட்சி பகுதிகளுக்கும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments