Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓசூர் தொகுதி காலி: தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2019 (14:03 IST)
கல்வீச்சு மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கிய நிலையில் அவரது எம்.எல்.ஏ பதவியும் அமைச்சர் பதவியும் பறிபோனது. தனக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாலகிருஷ்ண ரெட்டி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பாலகிருஷ்ண ரெட்டியின் ஓசூர் தொகுதி காலி என தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளதால் இந்த தொகுதி காலி என்பது உறுதியாகிவிட்டது. எனவே சுப்ரீம் கோர்ட்டில் பாலகிருஷ்ண ரெட்டியின் மனு தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் தற்போது ஓசூர் தொகுதியையும் சேர்த்து காலி எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. காலியான 21 தொகுதிகளுக்கும் வரும் பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments