Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம்!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (20:36 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம்!
திமுக அதிமுக என்ற இரண்டு திராவிட கட்சிகளை முந்திக்கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார் என்பது தெரிந்ததே 
நேற்று மாலை மதுரையில் தொடங்கிய தேர்தல் பிரச்சாரம் இன்று உசிலம்பட்டியில் நடைபெற்று வருகிறது. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் எழுச்சி பெற்று அவரது கட்சிக்கு ஆதரவு கொடுத்து வருவதை காண முடிகிறது
 
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக சற்றுமுன் உறுதிசெய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது
 
ஏற்கனவே கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இதே சின்னம் ஒதுக்கியதை அடுத்து வரும் சட்டமன்றத்திலும் அக்கட்சிக்கு இந்த சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மக்கள் மத்தியில் அறிமுகமான சின்னம் என்பதால் கமல் கட்சிக்கு வரும் தேர்தலில் சின்னத்தை பிரபலப்படுத்துவது எந்தவித பிரச்சனையும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதே போல் தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

65 வயது எம்பியை மணந்த 51 வயது பெண் எம்பி.. ஜெர்மனியில் ரகசிய திருமணம்..!

RCB வெற்றி விழா குறித்து முன்பே எச்சரித்த போலீஸ்? கண்டுகொள்ளாத கர்நாடக அரசு? - அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments