Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பிரச்சார நேரத்தை நீட்டித்த தேர்தல் ஆணையம்! – வேட்பாளர்கள் மகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (15:27 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 19ம் தேதி சனிக்கிழமையன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியான நிலையில் அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு மற்றும் பிரச்சார பணிகளில் ஈடுபட முன்னதாக காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை மட்டுமே மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், வேட்பாளர்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வாக்கு சேகரிப்பில் ஈடுபடலாம் என தெரிவித்துள்ளது. வாக்கு சேகரிப்புக்கு கூடுதல் நேரம் கிடைத்துள்ளது வேட்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments