Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சையில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!

தஞ்சையில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2016 (08:45 IST)
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த மூன்று தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.


 
 
இந்நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக இன்று முதல் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று தேர்தல் ஆணையம் தஞ்சையில் நடத்திய தேடுதல் வேட்டையில் ரூ.7.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
 
பறிமுதல் செய்த பணம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் என தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதிய ரூபாய் நோட்டுகள் அரசால் விநியோகிக்க தொடங்கும் முன்னர் நேற்றே கைப்பற்றப்பட்டது பல சந்தேகங்களை எழுப்பியது.
 
இதனையடுத்து உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணம் ஆர்.டி.ஓ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பணம் பாங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு சொந்தமானது என கூறப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு என குறிப்பிட்ட ராஜேஷ் லக்கானி உரிய ஆவணங்கள் இருப்பதால் விசாரணைக்கு பின்னர் அந்த பணம் ஒப்படைக்கப்படும் என கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments