Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சம்பந்தி வீட்டில் பணத்தை பதுக்கிய அதிமுக வேட்பாளர்: பறிமுதல் செய்த பறக்கும் படையினர்

சம்பந்தி வீட்டில் பணத்தை பதுக்கிய அதிமுக வேட்பாளர்: பறிமுதல் செய்த பறக்கும் படையினர்
, வெள்ளி, 13 மே 2016 (11:53 IST)
ஈரோடு மாவட்டம் கொடக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் தனது சம்பந்தி வீட்டில் பதக்கி வைத்திருந்த ரூ.1 கோடியை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.


 

ஈரோடு மாவட்டம் கொடக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுபவர் வி.டி.சிவசுப்பிரமணியம். இவர்களுடைய சம்பந்தி பாலசுரமணியம் என்பவர் கணபதி பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். சிவசுப்பிரமணியம் தனது சம்பந்தி வீட்டில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அங்கு விடைந்த பறக்கும் படையினர் பாலசுரமணியம்  வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ. 1 கோடிக்கு பணம் சிக்கியது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருவாரூர் தொகுதியில் கருணாநிதியை தோற்கடிக்க பயங்கர சதி?