விஜயகாந்த் தோல்விக்கு நானே காரணம்: பட்டாசாக வெடிக்கும் பாலு
விஜயகாந்த் தோல்விக்கு நானே காரணம்: பட்டாசாக வெடிக்கும் பாலு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தோல்விக்கு நான் தான் காரணம் என பாமக வேட்பாளர் பாலு கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து, உளுந்தூர்பேட்டை பாமக வேட்பாளர் பாலு கூறுகையில், நடைபெற்ற தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்துள்ளனர். எனவே, இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற குமரகுருவின் வெற்றியை ரத்து செய்து, இடைத் தேர்தல் நடத்த வேண்டும். இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்.
மேலும், இந்த தொகுதியில் தேமதிக தலைவர் விஜயகாந்த்-தை தோற்கடித்தற்கு நான் தான் கராணம் என்றார்.