Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி உயிருடன் மீட்பு !

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (14:06 IST)
ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி

ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டியை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று காலையில், பேசின் பிரிட்ஸ் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ஒருவர் சென்னை - பெங்களுர் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் முன் மாட்டிக் கொண்டார். இதை அறிந்து கொண்ட ரயில் ஓட்டுநர், சமயோஜிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தி அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் செயல்பட்டார்.
 
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது பெண் காவலர் மற்றும் சிலர் அங்கு ரயில் இன்ஜினில் சிகியிருந்த மூதாட்டியை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
 
ரயில் ஓட்டுநர் மெல்ல, மெல்ல ரயிலை பின்னால் எடுக்க, தண்டவாலாத்தில் முகம் பார்த்தபடி ரயில் இருந்த மூதாட்டி ரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவலை  ஊடகவியலாளர் மு. குணசேகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டை அடுத்து கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள்? அதிர்ச்சி தகவல்..!

பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம் : அமைச்சர் அமித்ஷா

இரவை குளிரவைக்க போகும் மழை! 14 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments