Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை விரைவில் ஊடகங்கள் முன்பு வெளியிடுவோம்: இளங்கோவன்

தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை விரைவில் ஊடகங்கள் முன்பு வெளியிடுவோம்: இளங்கோவன்
, சனி, 10 அக்டோபர் 2015 (12:27 IST)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அமைச்சர்கள் ஊழல் குறித்து ஆளுநரிடம் கடந்த மே மாதம் மனு அளித்துள்ளோம். அந்த மனு பரிசீலிக்கப்பட்டதாக தெரியவில்லை. எனவே மக்கள், ஊடகங்கள் முன்பு அமைச்சர்களின் ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடுவோம்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தியைத் தொடங்கி, தமிழக மின் தொகுப்பு 500 மெகாவாட் மின்சாரம் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது இரட்டை வேடமாகும். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடைபெற்றபோது அதைத் தூண்டிவிட்டவர் ஜெயலலிதாதான். போராட்டத்தை முடக்கி, அப்போதே மின் உற்பத்தியைத் தொடங்கியிருந்தால், இந்நேரம் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகி இருக்கும். தமிழகத்துக்கு 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வரை கிடைத்திருக்கும்.

திமுகவுடன் கூட்டணி அமைக்க ராகுல் எதிர்ப்பு தெரிவித்ததாகச் சொல்லப்படுவதில் உண்மை இல்லை.  தனித்துப் போட்டியிடலாமா, கூட்டணி அமைத்துப் போட்டியிடலாமா என்பதையெல்லாம் தேர்தல் நேரத்தில் கட்சி மேலிடமே முடிவு செய்யும் என்றார் அவர்.
 

Share this Story:

Follow Webdunia tamil