Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ரஞ்சித்தின் ஆசை கற்பனையில் மட்டுமே நிறைவேறும்: இல.கணேசன்

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (08:37 IST)
இயக்குனர் பா.ரஞ்சித் சமீபத்தில் ஜாதி குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதற்கு திருமாவளவன், சுப வீரபாண்டியன் போன்ற தலைவர்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தற்போது பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் கருத்து குறித்து இல.கணேசன் அவர்கள் கூறியபோது, 'பா.ரஞ்சித்தின் கருத்துகள் அவரது ஆசை, கற்பனையில் மட்டுமே நிறைவேறும். ஜாதிக்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது ஒருபோதும் நடக்காத செயல். அம்பேத்கரை பாஜக கொண்டாடுவதற்கு முழு உரிமை உள்ளது' என்றார்

மேலும் 'ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. நாடாளுமன்ற தேர்தலுக்குள் 2 அணிகள் அல்ல தமிழகத்தில் மூன்றாவதாக ஓர் அணி உருவாகும்' என்றும் இல.கணேசன் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments