Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை.. ஒரு வாரம் ஆகியும் சிக்காத குற்றவாளி..!

Mahendran
சனி, 19 ஜூலை 2025 (10:57 IST)
சென்னை கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் குற்றவாளி பிடிபடாமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால், குற்றவாளி எங்கு தப்பி சென்றார் என்பது தெரியவில்லை. குற்றவாளி குற்றவாளி இந்தியில் பேசியதாக சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில், அருகில் உள்ள மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஆந்திராவில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களிலும், சென்னை சென்ட்ரல் மற்றும் ரயில் நிலையங்களிலும் ஒவ்வொரு ரயிலிலும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
 
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, பள்ளி முடித்து வீடு திரும்பிய நான்காம் வகுப்பு மாணவியை மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், அந்த குற்றவாளியை தேடும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாகவும், அவருக்கு சிறப்பு மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
குற்றவாளி குறித்து இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை என்றும், ஐந்து தனிப்படைகள் இரவு பகலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமலாக்கத்துறை முக்கிய அதிகாரி திடீர் ராஜினாமா.. இரு முதல்வர்களை கைது செய்தவர்..!

முதல்வர் ஸ்டாலின் சகோதரர் மு.க.முத்து காலமானார்! அரசியல் பிரபலங்கள் இரங்கல்..!

முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க பணமில்லை.. தங்க சங்கிலியை பறித்த நபர் கைது..!

வாட்ச்மேனை கயிறு வாங்கி வர சொல்லி தூக்கு போட்டு தற்கொலை செய்த பேங்க் மேனேஜர்.. அதிர்ச்சி கடிதம்..!

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

அடுத்த கட்டுரையில்